உக்ரைனிலுள்ள இலங்கை மக்கள் குறித்து அவதானம்

தூதரகம் மூலம் தேவையான உதவிகள்

 

உக்ரைனில் உள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், யுக்ரைனில் வசிக்கும் 14 மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றினை விடுத்துக் குறிப்பிட்டுள்ளது.

யுக்ரைனில் உள்ள 14 இலங்கை மாணவர்களில் 6 பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய 8 மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

யுக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கையர்களை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

Wed, 02/23/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை