யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்றுக் காலை 09 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், இ.ஆனல்ட், கே.சயந்தன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

யாழ். குறூப், யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

Thu, 02/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை