A/L பரீட்சை எழுதும் மூன்று சிறை கைதிகள்

ஒருவர் புலிச்சந்தேக நபர்

 

வெலிக்கடை சிறைச்சாலை கைதி கள் மூவர் நேற்று (07) ஆரம்பமான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையின் 43, 46, 38 வயதுடைய மூவர் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களில் 38 வயதுடைய சிறைக் கைதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படுபவர் ஆவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக்கைதிகள், சந்தேக நபர்கள் புனர்வாழ்வை பெற்றுக் கொள்வதற்காக விசேட திறன்கள் உடையவர்கள் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு சமூக மயப்படுத்துவதே தங்களது பிரதான இலக்காகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Tue, 02/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை