யாழ். மயிலிட்டி துறைமுகத்தின் 2ஆம் கட்ட பணிகள் ஆரம்பம்

யாழ். மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை நேற்று (17) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

துறைமுகத்தை கட்டும்போது அப்பிரதேசத்தின் கடற்றொழில் அமைப்புக்களுடன் கலந்துரையாடியே அமைப்பது வழமை. அதேபோன்றே இங்குள்ள கடற்றொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடி முதலாவது கட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அதில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் தற்போது எமது அரசாங்கத்தால் அதன் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கடந்த காலத்தில் விடப்பட்ட அனைத்து குறைபாடுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நவீனத்துவத்துடன் கூடியதாக நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.

யாழ். விசேட, யாழ். குறூப் நிருபர்கள்

Fri, 02/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை