கொவிட் -19 பரவல்; சிறுவர்களிடையே திடீர் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு சுமார் 20 சிறுவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நான்கு விடுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலையில் தற்போது 80 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எவ்வாறாயினும், கொவிட்-19, வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு உட்பட இதேபோன்ற நோய்கள் பரவுவதால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.

Mon, 02/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை