இன்று முதல் சகல அரச ஊழியர்களும் கடமைகளுக்கு சமுகமளிக்க அழைப்பு

மாகாண, உள்ளூராட்சி அமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவிப்பு

 

சகல அரச ஊழியர்களும் இன்று முதல் வழமை போன்று கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொர்பான சுற்றுநிருபத்தை அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப் பிரதானிகளின் அங்கீகாரத்திற்கு அமைவாக இதுவரை அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  இன்று முதல் வழமையான முறையில் பணி இடம்பெறுவதனால் சகல திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும். நாட்டின் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அரசசேவையும் புத்தாண்டில் இருந்து வழமைப்போன்று இடம்பெற வேண்டும். கொவிட் தொற்றின் காரணமாக அரச சேவை ஊழியர்களுக்கு 2 வருட காலம் தொடர் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து இன்றைய தினம் கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக முக்கியமானவர்களைத் தவிர, அரச ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்காக நிறுவக பிரதானிக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறை புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது. 

Mon, 01/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை