பொது இடங்களில் இனி புகைப்பிடித்தால் ஆபத்து!

கண்டறிய கைத்தொலைபேசியில் புதிய செயலி

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிவதற்காக கைத்தொலைபேசியில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன இணைந்து இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.

அந்த செயலியைத் தரவிறக்கம் செய்வதன் ஊடாக பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் தொடர்பில் எந்தவொரு நபருக்கும் தகவல் வழங்க முடியும்.

இதேவேளை, எதிர்காலத்தில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை