ஆப்கானில் அடுத்தடுத்த பூகம்பத்தில் 22 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மேற்கில் கடந்த திங்கட்கிழமை அடுத்தடுத்து இடம்பெற்ற பூகம்பங்களில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடமேற்கு பத்கிஸ் மாகாணத்தில் 4.9 மற்றும் 5.3 ரிக்டர் அளவில் பதிவான பூகம்பங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களில் நான்கு சிறுவர்கள் இருப்பதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

700க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடியிருப்புகள் நிலையானதாக அல்லது நன்கு கட்டப்படாத சூழலில் ஆப்கானில் பூகம்பங்கள் கணிசமான சேதங்களை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 01/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை