இன்று நாட்டின் 12 மாவட்டங்களில் 80 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 12 மாவட்டங்களில் 80 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-80 Vaccination Centers Operating in 12-Districts-Jan 16-2022

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (16) நாடு முழுவதும் 12 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 80 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

அது தவிர இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் மற்றும், யாழ்ப்பாணம் - நாவற்குழி, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இடங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. (இணைப்பை பார்க்கவும்)

இதில்,

  • 1ஆவது டோஸ் Sinopharm
  • 2ஆவது டோஸ் Sinopharm
  • 1ஆவது டோஸ் Sinopharm (20 - 30 வயதுக்குட்பட்டோருக்கு)
  • 3ஆவது டோஸ் (Booster) Pfizer (20 வயதுக்கு மேற்பட்டோருக்கு) ஆகிய தடுப்பூசிய மையங்கள் செயற்படுகின்றன.

இதேவேளை நேற்று (15) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (16) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Sun, 01/16/2022 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை