இரத்தம் சிந்திய விடயங்களை மறக்குமாறு சம்பிக்க கோரல்

யாழ். ஊடக சந்திப்பில் பகிரங்கமாக தெரிவிப்பு

இலங்கையில் கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியாவிட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, புலம்பெயர்ந்தவர்கள் தம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 2023ஆம் ஆண்டு இடம்பெறும் என தெரிவித்த சம்பிக்க, அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை