சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் நேற்று முதல்

 

மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் நேற்று (07) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகியது. களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய் நிறைவடைந்ததால் கடந்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.  எதிர்வரும் 02 வாரங்களில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது.

 

ஜனவரி மாத நடுப்பகுதியிலும், எரிபொருளை ஏற்றிக் கொண்டு மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை