சட்ட ஏற்பாடுகள் விரைவில் வருகிறது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 02 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 02 அல்லது 03 மாதங்களில் மேற்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எத்தகைய தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாத பெண் ஒருவர் நாட்டுக்கு வந்தமை, அவர் ஒமிக்ரோன் திரபுள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறித்து கண்டறியப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். புதிதாக கண்டறிப்பட்ட வைரஸ் திரிபு குறித்து எதிர்கால நடவடிக்கைள் தொடர்பில் (09) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்பட்டன.
Sat, 12/11/2021 - 06:00
from tkn