இன்னும் ஐந்து நாட்களுக்குள் GAS தட்டுப்பாட்டுக்கு தீர்வு

லிட்ரோ GAS நிறுவனம் உறுதி

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்குமென லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

இன்னும் 05 நாட்களுக்குள், அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்தத் தொகையை வழங்கக்கூடியதாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைகிறது. எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்கும்.

எனவே, சமையல் எரிவாயு கிடைப்பதில் தற்போது எவ்வித குறைப்பாடும் இல்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை