FIFA தலைவர் ஜியானி இரு நாட்கள் இலங்கையில்

கால்பந்தாட்ட இறுதி போட்டிக்காக வருகை

சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத் (Federation Internationale de Football) தலைவர் ஜியானி இன்பன்டீனோ நேற்றுக் காலை இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்று மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நடைபெற்ற, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக பீபா தலைவர் ஜியானி இன்பன்டீனோ கலந்துகொண்டார்.நான்கு நாடுகளுக்கிடையிலான இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை, சிஷெல்ஸ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜியானி இன்பன்டீனோவுடன் பீபாவின் உயர் அதிகாரிகள் பலரும் இலங்கை வந்துள்ளனர்.

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை