நகரங்களுக்கிடையேயான கடுகதி சேவை திங்கள் முதல்

ரயில்வே பொது முகாமையாளர் தெரிவிப்பு

நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இரவுநேர அஞ்சல் ரயில் மற்றும்  வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன. இருப்பினும் தற்போது வரையில் இரவு 7 மணிக்கு பின்னரான தூரப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகளும், குறுந்தூர புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதில்லை.

நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை