வைரஸ் தொற்று பரவல் தொடரும் நிலையில் நாடு

மக்களை எச்சரிக்கிறார் இராணுவத் தளபதி

சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் கொவிட் தொற்றுநோய் இன்னும் அதிகமாக பரவி வருவதால் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் நேற்று இராணுவ வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை  வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அன்றாடம் 500 முதல் 600 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் இராணுவத் தளபதி எச்சரித்தார். மக்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகள் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனவே மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பெறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை