சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்

உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பிரதமர் சபையில் இரங்கல்

 

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) பாராளுமன்றத்தில்  தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த அவர்,

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக எமது நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, அந்நடவடிக்கைக்கு உங்களது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்.சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீரற்ற காலநிலை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் அறிக்கையொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஹம்ஸ் பாஹிம்

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை