நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல்

KKS வரையான ேசவையும் ஆரம்பமாகிறது

 

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சிறப்பானது நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், இரவு 7 மணியின் பின்னர் தூர மற்றும் குறுந்தூர சேவைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதில்லை.

இந்நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணியின் பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி சேவைகளை முன்னெடுக்க உள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது 180 முதல் 200 ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இன்று முதல், காங்கேசன்துறை வரை இடம்பெறும் நகரங்களுக்கு இடையிலான சேவையை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு முதல் கண்டி வரையில் சேவையில் ஈடுபடும் நகரங்களுக்கிடையிலான சேவையும், மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறிருப்பினும், வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் மண்சரிவு காரணமாக, பதுளைக்கான சேவையை ஆரம்பிக்க முடியாதுள்ளது.நிலைமை சீரானதன் பின்னர், அந்தத் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்.

அதேநேரம், அடுத்த கலந்துரையாடல்களில், இரவுநேர அஞ்சல் ரயில் சேவைகளையும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகத் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை