நான்கு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தற்போது மனிதனை மாத்திரமின்றி, மிருகங்களையும், பறவை களையும் தாக்கி இருப்பது பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மிருகக்காட்சிச் சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆபிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை திறந்தவெளியில் விட்டு இருந்தார்கள். இரவு நேரங்களில் வாகனங்களில் சென்று இவற்றை பார்ப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அதில் ஆசிய வகை சிங்கங்கள் சில சோர்வாக காணப்பட்டன. சளி பிடித்து தும்மியபடியும் இருந்தன. எனவே சிங்கங்களுக்கு சோதனை நடத்தினார்கள். அதில் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனாலும் அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், நன்றாக உணவு சாப்பிடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆபிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை