பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்

மட்டு. மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகை காலத்தில் பொது மக்களை மிகுந்த அவதானத்துடனும் சமூகப் பொறுப்புடனும் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று தொடர்பான அச்சம் முழுமையாக நீங்காத நிலையில்,பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைவடைந்து வரும் நிலை காணப்பட்டாலும், தீபாவளி பண்டிகைக் காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் நடமாடுவது அவதானிக்கப்படுவதனால், அவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது சுகாதார பாதுகாப்புடன் செயற்படும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மக்கள் பண்டிகை காலங்களில் சனநெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு செல்வதை இயன்றளவு தவிர்த்து, வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும், அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்ல வேண்டுமெனவும், அவ்வாறு செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். 

இம்முறையும் எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான், கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர். 

கொரோனா தொற்றை நாட்டிலிருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

மட்டக்களப்பு குறூப், கல்லடி குறூப் ,புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள் 

 

 

Thu, 11/04/2021 - 08:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை