சி.வியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், எமது குடும்பத்துடன் நெருக்கமாக உறவு உள்ள ஒருவர். அவரை நீண்டகாலமாக எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் ஒரு சிநேகபூர்வமான சந்திப்பாகவே அவரை சந்தித்துள்ளேன். அரசியல் ரீதியாக எந்த விடயமும் நாம் பேசிக் கொள்ளவில்லை ஒரு சினேக பூர்வமாகத்தான் நான் அவருடன் கலந்துரையாடினேன் என தெரிவித்தார்

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன், எமது நீண்டகால நண்பருடன் சிநேகபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டேன். நான் அரசாங்கத்துடன் சேர்ந்து விட்டேன் என சிலர் நினைப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு ஒன்றும் பேசவில்லை நாங்கள் சினேகபூர்வமாக சில விஷயங்களை பேசினோம் என்றார்.

யாழ். விசேட நிருபர்

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை