வீடு அல்ல காணி தேவையே மலையக மக்களது பிரச்சினை

உணர்ந்து செயற்பட முன்வருமாறு ஜீவன் அழைப்பு

 

மலையக மக்களுக்கு வீடு வழங்குவதைவிட அவர்களுக்கு சொந்தமாக காணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஒரு இலட்சம் வீடுகள் மலையகத்துக்கு தேவைப்படும் நிலையில் 14ஆயிரம்  வீடுகளுக்காக நாம் சண்டை போடுகிறோம். ஆனால் 150 வருடங்களாக அந்த மக்களுக்கு காணி உரிமை இல்லை எனவும் அவர் குறிபிப்பிட்டார். வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2021 வரவு செலவு திட்டத்தில் பல வேலைத்த்திட்டங்களை முன்வைத்தாலும் கொவிட் தொற்றினால் நாம் நினைத்த அளவு அவற்றை செய்ய முடியாமல்போனது. ஒதுக்கப்பட்ட நிதியில் அதிகம் கொவிட் கட்டுப்பாட்டுக்கே செலவிடப்பட்டது. மஸ்கெலியாவில் இரண்டு வைத்தியசாலைகளை புதுப்பித்தோம். எமது முன்னெடுப்புகளின் காரணமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 35வரை குறைக்க முடிந்தது. எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் பாரிய தொகையை கொவிட் கட்டுப்பாட்டுக்காக செலவிடப்பட்டாலும் எங்களால் முடிந்த அபிவிருத்திகளை மேற்கொண்டோம். நெடுஞ்சாலை அமைச்சின் உதவியுடன் மலையகத்தில் பாதை அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக மலையகத்தில் வீதி அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. தற்போது 350க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் நீள வீதிப் பணிகள் இடம்பெறுகின்றது.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை என்பன தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அதாவது இந்த மூன்று விடயங்களும் மலையகத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் வழங்கினால் நிச்சயமாக மலையகத்தை முன்னேறமுடியும். மலையகத்தில் ஸ்மாட் வகுப்பு உருவாக்க 250 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும். அரசாங்கம் தோட்ட வீடமைப்புக்கு வெறும் 500 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சி விமர்சிக்கிறது. ஆனால் 500மில்லியனுக்கு மேலதிகமாகவே வீடமைப்புக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது எமது அமைச்சுக்கு இரண்டாயிரத்தி 471மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிதியை கொண்டு மலையகத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை விரைவில் அறிவிப்போம். கொவிட் காலத்தில் அபிவிருத்தி இடம்பெறவில்லை என யாருக்கும் கூற முடியாது.

மலையத்துக்கு இருக்கும் பிரதான பிரச்சினை வீடமைப்பு அல்ல. காணி பிரச்சினையேயாகும் மலையகத்துக்கு இந்திய அரசாங்கத்தினால் 14ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்ட இருக்கின்றன. எமது அரசாங்கத்தினால் வருடத்துக்கு ஆயிரம் வீடுகள்தான் நிர்மாணிக்க முடியும். ஒரு இலட்சம் வீடுகள் மலையகத்துக்கு தேவைப்படும் நிலையில் 14ஆயிரம் வீடுகளுக்காக நாங்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் 150 வருடஙகளாக வாகழும் அந்த மக்களுக்கு காணி உரிமை இல்லை. ஆனால் 30வருடத்துக்கு முன்னர் வந்த துறைமாருக்கு காணி உரிமை இருக்கின்றது. இது எந்தளவுக்கு நியாயம். எமது மக்கள் நினைத்தால் அவர்களுக்குரிய வீடுகளை கட்டிக்கொள்ள முடியும். அந்த வசதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. என்றாலும் சொந்த காணியில் வீடு கட்டவேண்டும் என்றே இருக்கின்றனர்.

அதனால் அந்த மக்களுக்கு வீடு வழங்குவதைவிட அவர்களுக்கு சொந்தமாக காணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எமது கட்சியின் இலக்கும் அந்த மக்களுக்கு காணி பெற்றுக்கொடுப்பதாகும்.

(ஷம்ஸ் பாஹிம்)

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை