அமரர் டீ.ஏ.ராஜபக்‌ஷவின் 54 ஆவது நினைவு தினம் உருவச்சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மலரஞ்சலி

அமரர் டீ.ஏ.ராஜபக்‌ஷவின் 54 ஆவது நினைவு தினம் தங்காலை மஹவெல வீதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரது தலைமையில் நேற்று (07) முற்பகல் இடம்பெற்றது.நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மலரஞ்சலி செலுத்தினர்.

புவக்தண்டாவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவிகள் டீ.ஏ.ராஜபக்‌ஷ நினைவு கீதத்தை இசைத்தனர். அதனை தொடர்ந்து பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்‌ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நாமல் ராஜபக்‌ஷ,எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, டீ.வீ.சானக, ஜானக வக்கும்புர, தேனுக விதானகமகே, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே ஆகியோர் டீ.ஏ.ராஜபக்‌ஷவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

டீ.ஏ.ராஜபக்‌ஷ நினைவு தின குழுவின் சார்பில் தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கபில திசாநாயக்க மற்றும் பிரதான பிரதி செயலாளர் உபுல் திசாநாயக்க மற்றும் தென் மாகாண சபையின் தவிசாளர் சோமவங்ஷ கோதாகொட ஆகியோர் டீ.ஏ.ராஜபக்‌ஷ உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

தங்காலை வகேகொட புராதன வஜிரகிரிய விகாராதிபதி மிரிஸ்ஸே தம்மவங்ஷ தேரர் இதன்போது அனுசாசனம் நிகழ்த்தினார்.

வீரகெடிய மெதமுலனவிலுள்ள டீ.ஏ.ராஜபக்‌ஷ மற்றும் அவரது பாரியார் தோன தந்தினா சிமரசிங்க திசாநாயக்க ஆகியோரது நினைவிடத்திற்கு நேற்று முன்தினம் (06) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோர் விளக்கேற்றி பெற்றோரை நினைவு கூர்ந்தனர்.

 

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை