ரஷ்ய நிலக்கரி சுரங்க விபத்தில் 52 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது.

நவம்பர் 25ஆம் திகதி, வியாழக்கிழமை, மொஸ்கோவிலிருந்து சுமார் 3,500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லிஸ்ட்வேஸ்னியா என்ற சைபீரிய சுரங்கத்தில் காற்றோட்டத்துக்காக சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாயிற் குழியில் படிந்திருந்த நிலக்கரித் துகள்களில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

அவசர உதவி சேவையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் யாரும் உயிரோடு இல்லை என ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். லிஸ்ட்வேஸ்னியா சுரங்கத்தின் பணிப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய ஆய்வுக் குழு கூறியுள்ளது. 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். ரஷ்யாவில் உள்ள 58 நிலக்கரிச் சுரங்கங்களில் 34 வீத சுரங்கங்கள் பாதுகாப்பற்றவை என்று 2016இல் அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் 2004 ஆம் ஆண்டு மீத்தேன் வாயு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Sat, 11/27/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை