50% கொள்ளளவில் போட்டிகளை நேரடியாக பார்வையிட இரசிகர்களுக்கு அனுமதி

தற்போது காலியில் இடம்பெற்றுவரும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டிகளை பார்வையாளர் பகுதியின் 50% கொள்ளவுடன் பார்வையிடலாமென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்படி, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை எல்பிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்துக்குள் உள்வாங்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷன தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் ஒன்றுமில்லை. கிரிக்கெட்டின் .ரசிகன் என்ற ரீதியில், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிப்பதற்கு, சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டள்ளது” என நாமல் ராஜபக்‌ஷ பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில், இலங்கையில் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில், மட்டுப்படுத்தப்பட்ட அளவு இரசிகர்கள் மைதானத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

எல்பிஎல் தொடர் எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி கோல் கிளேடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

இதில், நடைபெறவுள்ள 20 லீக் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், ஏனைய போட்டிகள் அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதுடன், 24ஆம் திகதி இறுதிப்போட்டிக்கான மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/24/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை