ஆசியாவில் மிகப் பெரிய போதைப்பொருள் பறிமுதல்

லாவோஸ் நாட்டு பொலிஸார் ஆசியாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய போதைப் பொருள் குவியலைக் கைப்பற்றியுள்ளனர்.

5.5 கோடி மெதாம்பிடமின் மாத்திரைகள் மற்றும் 1.5 தொன்னுக்கும் அதிகமான கிறிஸ்டல் மெத் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் குற்றப் பிரிவு முகமை கூறியுள்ளது.

இது ஆசியாவில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப் பெரிய அளவிலான போதை மருந்துப் பொருள் குவியல் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.

தாய்லாந்து மற்றும் மியன்மார் எல்லைப் பகுதியான பொகெயோவில், பீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த ஒரு லொறியை தடுத்து நிறுத்தி சோதித்த போது இத்தனை பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தப்படுவது தெரியவந்தது.

தங்க முக்கோண சாலை என்று அழைக்கப்படும் இந்த பகுதி, பல ஆண்டு காலமாக போதைப் பொருள் தயாரிப்பின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது.

Sat, 10/30/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை