இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக் கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று மு.ப. 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல் வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று மு.ப. 9.30 மணியளவில் வந்தடைந்தது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இழுவை மடி மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் பின்னர் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் ட்றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு நீதி கோரி கடல்வழியாக இந்த கண்டனப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சிறீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லையில் ஆரம்பித்த கடல் வழிப் போராட்டம் யாழில் நிறைவு!-Protest Against Indian Fishermen

இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் பலரும் கலந்து கொண்டனர்

யாழ். விசேட நிருபர்

Sun, 10/17/2021 - 11:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை