இந்தியாவை பகைத்தாலும் எமது மீனவர்கள், கடல்வளத்தை பாதுகாப்பதில் அரசு உறுதி

மட்டு. விஜயத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவேண்டும், எங்களது வளங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக கடற்​றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.  மட்டக்களப்பில் (27) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது.ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.

இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தொடுக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர்.

விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவேன். சஜித் பிரேமதாச, தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டமென்ற ஒன்றை பயன்படுத்திக்கொண்டார்.மக்களுக்கு கொஞ்சம் காசை வழங்கி வாக்கை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை. எங்களது கஜனா இன்று காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தை வழங்கக்கூடிய நிலையில் நம் இல்லை. இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழுநாட்டுக்குமான பிரச்சினை. தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தற்காலிகமானது. எவ்வாறு இந்த நாட்டிலிருந்த வன்முறைக்கு தீர்வு கண்டாரோ,இந்த நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பாரென்று நம்புகின்றோம் என்றார்.

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை