மேலதிக வாக்குமூலம் பெறவேண்டுமாம்
முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக் ஷவின் கணவரான திருக்குமார் நடேசனிடம் மேலதிகமாக வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பென்டோரா ஆவணங்கள் தொடர்பில், திருக்குமார் நடேசன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் (08) ஆம் திகதி 03 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதேவேளை சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், கிடைத்துள்ள சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளின்போது கவனம் செலுத்தப்படுமென இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Mon, 10/11/2021 - 06:00
from tkn