விசாரணைகளை மூடி மறைப்பதாக சாடல்

மெல்கம் ரஞ்ஜித் குற்றச்சாட்டு

 

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை' ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள்  நடைமுறைப்படுத்துவதில்லை என தெளிவாகியுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ள நிலையில் நேற்று (21) கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் (நேற்று) 30 மாதங்கள் கடந்துள் போதிலும் தகாக்குதலின் சூத்திரதாரி யார் என இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள் விசாரணைகளை மூடி மறைக்க முயற்சிப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Fri, 10/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை