காலநிலை விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு மூவருக்கு பௌதீகவியலுக்கான நோபல்

பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை பொதீகவியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கரியமிலவாயு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பதை விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் பௌதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜெர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பூமியின் வளிமண்டலத்தில் கரியமிலவாயு செறிவு அதிகரிக்கும்போது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்துள்ளார். 1960களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தது. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.

1980 இல், ஜார்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருட்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை பௌதீகவியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

Wed, 10/06/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை