போராட்டம் தொடரும் என்கிறார் ஸ்டாலின்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் (21) வியாழக்கிழமை திறக்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராடவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டாலும் எமது வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 10/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை