ஒம்புட்ஸ்மனை சந்தித்துரையாடிய நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர்

நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்

 

நியூஸிலாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிலிட்டன் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் அன்ரு ரவலர் ஆகியோர் பாராளுமன்றத்தின் குறைகேள் அதிகாரியான (ஒம்புட்ஸ்மன் ) ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரீ. சித்திரசிறியை நேற்று சந்தித்தனர். கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள ஒம்புட்ஸ்மன் அலுவலகத்தில்  இச்சந்திப்பு இடம்பெற்ற து. இலங்கையில் உள்ள அரச திணைக்களங்கள்,கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் சேவையாற்றும் அரச ஊழியர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால், அவை பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து உடன் தீர்வு பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களில் குறைகேள் அதிகாரியின் நடவடிக்கைகள் பற்றி உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அலுவலகத்தின் நிர்வாக வள குறைபாடுகள் பற்றி தெரிவித்த குறைகேள் அதிகாரி, ஊழியர்களுக்காக மடிக் கணினி ஒரு தொகுதியை வழங்குமாறும் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை முன்வைத்தார். அதனை நிவர்த்தி செய்வதாக நியூஸிலாந்து உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.

 

தெஹிவளை, கல்கிசை விசேட நிருபர்

Sat, 10/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை