புனித பகவத் கீதையின் முதற்பிரதி பாரத பிரதமரிடம் வழங்கி வெளியீடு

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்வுக்காக நேற்று அங்கு சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, இலங்கையில் மும்மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட பகவத் கீதையின் முதற்பிரதியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கிவைத்த போது...

புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பதிப்பிக்கப்பட்ட பகவத்கீதையின் முதற்பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (20) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்திலுள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ( 20 ) திறந்து வைத்தார். குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்புவிழா, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு சென்ற விமானம் தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே 2,500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத் கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கயின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்தியப் பிரதமர் மோடிக்கு

Thu, 10/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை