மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கம்

வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவிப்பு

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது. இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும்.

எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Fri, 10/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை