மாப்பாண முதலியார் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு

நல்லூர் ஆலய முதலியார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

 

குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இழப்பு, நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பென்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-  இலங்கைத் திருநாட்டிலே சமய சக வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் ஒரு கோயில் நல்லூர்க் கந்தசுவாமி கோயில். இங்கு இன, மத பாகுபாடு பாராட்டப்பட்டு யாரும் கண்டதில்லை.

இறைவன் சந்நிதியில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை நாம் இங்கு காண முடியும். நம்தாய்த்திருநாட்டின் உலகறிந்த அடையாளம் இந்தப் பெருமைமிகு ஆலயம். அருள் ஒளி வீசும் அற்புத ஆலயம்.

நம் தேசத்துக்குப் பெருமை தரும் வகையில், உலகப்புகழ் பெற்ற நல்லைக் கந்தன் ஆலயத்தின் நிர்வாகத்தைச் சிறப்புற முன்னெடுத்தவர் குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார்.

அவருக்குக் கந்தப்பெருமானின் அருட்கடாட்சம் எப்போதும் துணை நின்றது.

அதுவே குகஸ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரை செயலாற்றல் மிக்க அடியவனாக்கியது. அப்படிப்பட்ட மகோன்னத புருஷரின் இழப்பு, நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியுற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” என்றும் பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.''

Mon, 10/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை