மாகாணசபைத் தேர்தலை நடத்த இரண்டு வழிமுறைகள் உள்ளன

விரைவாக நடத்தவே அரசு எதிர்பார்க்கிறது

 

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இணங்கியதைத் தொடர்ந்து, அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பாக ஆராய நிபுணர் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இந்த வருட இறுதிக்குள் எமக்கு கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.அனைத்து தேர்தல்களையும் ஒரே முறையின் கீழ் நடத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்தோடு, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் நாம் ஆலோசித்து வருகிறோம்.இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று கலப்புமுறையில் தேர்தலை நடத்தவேண்டும். இல்லையெனில், 2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தால் இல்லாது செய்யப்பட்ட தேர்தல் முறைமையை மாகாணசபைத் தேர்தலுக்கு மட்டும் மீளப் பயன்படுத்துவது தொடர்பாக பாராளுமன்றின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

அப்படியாயின் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாம் தயாராகவே இருகிறோம் என்றார்.

 

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை