ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

சுகாதார அமைச்சு அறிக்கை வெளியீடு

கொவிட்19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரத்து 329 பேருக்கு கொவிட்19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொவிட்19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று முன்தினம் (21) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 5,834 பேருக்கும், சைனோபார்ம் முதலாவது டோஸ் - 3,969 பேருக்கும் சைனோபார்ம் இரண்டாவது டோஸ் -59,428 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை. அத்துடன் ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை. ஃபைசர் முதலாவது டோஸ் - 75,763 பேருக்கும், பைசர் இரண்டாவது டோஸ் - 786 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது. மொடர்னா முதலாவது டோஸ் -யாருக்கும் ஏற்றப்படவில்லை மொடர்னா இரண்டாவது டோஸ் - 6,180 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீனப் பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

 

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை