இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (16) நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 188 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
நேற்று (15) கொழும்பிலுள்ள A/L பரீட்சார்த்திகளுக்கு (18 - 19 வயதுடையவர்களுக்கு) Pfizer தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஏனைய மாவட்டங்களில் அவ்வயது பிரிவினருக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (15) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
இன்று (16) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...
from tkn