இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 303 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 303 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-303-Vaccination-Centers-In-22-Districts-October-22

- 16-19 வயதுக்குட்பட்ட மாணவருக்கு இன்று தடுப்பூசி

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (22) நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 303 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு இன்று (22) முதல் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, தாம் கல்வி கற்கும் பாடசாலைகளில் இவ்வாறு Pfizer தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

இதேவேளை நேற்று (21) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (22) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Fri, 10/22/2021 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை