06 மாதங்களாக வயிற்றில் செல்போனுடன் திரிந்த நபர்!

எகிப்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவரை பரிசோதித்த போது, அவரது வயிற்றில் ஒரு முழு கையடக்க தொலைபேசி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கையடக்க தொலைபேசியை விழுங்கியமையை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. எனினும் கையடக்க தொலைபேசி இயற்கையாகவே மலம் கழிக்கும் போது வெளியேறிவிடுமென அவர் நம்பியதால் யாரின் உதவியையும் அவர் நாடவில்லை.

கையடக்க தொலைபேசியை தாம் விழுங்கியதாக தெரிவித்து வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவர் விரும்பவைல்லை. எனினும் கையடக்க தொலைபேசி வயிற்றில் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததுடன், உணவு கடந்து செல்வதையும் தடுத்ததுடன், அவரது வயிற்று வலி மிகவும் மோசமாகி, இறுதியாக அவர் மருத்துவ உதவியை நாட வேண்டியிருந்தது. இதனையடுத்து அவர் அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனை சென்றபோது மருத்துவர்கள், அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். அவரது வயிற்றுக்குள் முழுமையான கையடக்க தொலைபேசி காணப்பட்டது.

அதன்பின்னர் சுமார் 02 மணித்தியால அறுவை சிகிச்சையின் பின்னர் அவரது வயிற்றிலிருந்து கையடக்க தொலைபேசி அகற்றப்பட்டது. குடல் மற்றும் வயிற்று நோய்த்தொற்றுகள் உட்பட உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

அந்த நபரின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் முழுமையாக குணமடைவாரென்று நம்பப்படுகிறது. எனினும் அவர் ஏன் கையடக்க தொலைபேசியை விழுங்கினாரென்பது தற்போது வரை தெரியவில்லை. இதேவேளை கடந்த மாதம், கொசோவோவில் 33 வயதான நபர் ஒருவர் போலி நோக்கியா 3310 ஐ விழுங்கியிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அது அவரால் ஜீரணிக்க முடியாத அளவிற்கு பெரியதாக இருந்ததுடன் பற்றரி அமிலம் வெளியே கசிந்திருக்கும் என்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவரது வயிற்றை வெட்டாமல், எண்டோஸ்கோபி மூலம் மூன்று துண்டுகளாக்கி அதை வைத்தியர்கள் அகற்றி இருந்ததாக கூறப்பட்டிருந்தது.

 

Sat, 10/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை