சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்

இரு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கான முழு தடுப்பூசிகளை பெற்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்தவர்கள் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் தொடர்பான சகல மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய அவர்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய விருந்தகங்கள், உணவகங்கள் போன்றவற்றுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இது தவிர, மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அனுமதி பத்திரத்தை கொண்ட மதுபானசாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கு மதுபானத்தை விநியோகிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Mon, 09/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை