யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பார்வையிட்டதுடன், எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
நேற்று (09) நண்பகல் யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இளைஞர் விவகார மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் மருதடி வீதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட குளத்தைப் பார்வையிட்டதுடன், நீர் விநியோகம் மற்றும் பயன்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கொட்டடி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கட்டுமானத்தையும் பார்வையிட்டதுடன், யாழ்.மாநகர சபைக்கென புதிதாக அமைக்கப்படும் கட்டடத்தின் கட்டுமானத்தைப் பார்வையிட்டதுடன், கட்டுமானத்தில் ஏற்படும் தாமதங்கள், நிதி தொடர்பாகவும், கேட்டறிந்து கொண்டதுடன், கட்டுமானங்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும், அதிகாரிகளுடனும், பொறியியலாளர்களுடனும் கலந்துரையாடினார்.
அதன்பின்னர், யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் காணிகளற்றவர்களுக்கான, வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும், அளவெட்டி அருணோதயா கல்லூரிக்கும் விஜயம் செய்து, பாடசாலை அபிவிருத்தி மற்றும், விளையாட்டு மைதானம் தொடர்பில் ஆலோசனை நடாத்தினார், பின்னர், நாவற்குழி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் கிளிநொச்சி,நீர் விநியோகம் தொடர்பிலும், ஆராய்ந்தார்.
இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.பிரதேச செயலாளர் எஸ். சுதர்சன் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் குறூப் நிருபர்
from tkn