புதிய இறக்குமதி விதி அமுலால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது

ஒருபோதும் விலை அதிகரிப்பிற்கு வாய்ப்பில்லை

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி விதியால் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாதெனவும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் சாத்தியமில்லை எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு முறைமைக்கு மாத்திரமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி உரிமம் பெற்ற வணிக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கிகளுடனான நாணயக் கடிதங்களினதும், அத்துடன் ஏற்றுக்கொள்ளும் நியதிகளுக்கு எதிரான ஆவணங்களின் கீழ் நூறு சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, ஊக வியாபாரத் தன்மையிலான மிதமிஞ்சிய இறக்குமதிகளை ஊக்கமிழக்கச் செய்வதன் வாயிலாக அந்திய செலாவணி வீத உறுதிப்பாட்டினையும் வெளிநாட்டு நாணயச் சந்தை திரவத்தன்மையினையும் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இதுதுணை புரியும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Mon, 09/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை