தடுப்பூசி வழங்கும் விடயத்தில் இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில்!

உலகளாவிய கொவிட் தடுப்பூசி கண்காணிப்பு பிரிவு தகவல்

ஆவணங்களை கையளித்தார் அமைச்சர் நாமல்

 

உலக ரீதியில் இரண்டாவது வாரமாகவும் இலங்கையானது தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளில் முன்னணி வகித்துள்ளது. தடுப்பூசி வழங்கலில் கடந்த வாரமும் உலகளாவிய ரீதியில்  இலங்கையே முன்னணி வகித்தது.

இலங்கையின் சனத்தொகையில் நூற்றுக்கு 11.6 வீதமானோருக்கு கடந்த வாரத்தில் மட்டும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக உலக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் கணிப்புகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடும் 'அவர் வோர்ல்ட் இன் டேடா'இணையத்தள கணிப்பீட்டு பிரிவின் தலைவர் எட்வர்ட் மெத்திவ் தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டுள்ளார்.

அந்த இணையதளத்தில் அறிக்கைக்கு இணங்க நியூஸிலாந்து மற்றும் கியூபா ஆகியன முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தில் உள்ளன. ஈக்குவடோர் மற்றும் பனாமா நாடுகள் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளன.

அதேவேளை, 20 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சாத்தியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 28 மத்திய நிலையங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 30 மத்திய நிலையங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் 38 மத்திய நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 09/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை