இராஜங்க அமைச்சர் ஜீவனுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
டயகம பிரதான பாதையினை இணைக்கும் பாதை புனரமைக்கப்படவுள்ளது. சுமார் ஐந்து தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக இது காணப்படுகின்றது. இந்த பாதையின் பாலம் மற்றும் ஆலயம் என்பன கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியது. இதனால் பாலம் மற்றும் ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ள ஆலயம் என்பன உடைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுெதாடர்பில் இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பாலத்தினையும் ஆலயத்தினையும் பாதுகாக்கும் முகமாக சுமார் 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரிய மதில் ஒன்றினை அமைக்க இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசாங்கம் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் மலையக பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதற்கமைய டயகம இரண்டாம் பிரிவு டயகம கொலனி, டயகம மோனிங்டன், கீழ் பிரிவு மேல்பிரிவு உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். இப்பிரிவிலிருந்து நகர பாடசாலைக்கு வரும் மாணவர்களும் இந்த பாலத்தினூடாகவே பயணம் செய்துவந்தனர். மழை காலங்களில் வெள்ள நீர் இப்பாலத்தினையும் கோயில் பக்கத்திலுள்ள மண் திட்டினையும் அரித்து செல்வதனால் பாலத்திற்கும் ஆலயத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மழை காலங்களில் மக்கள் பாரிய அச்சத்திலேயே குறித்த பாலத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே குறித்த பாலத்தினையும் ஆலயத்தினையும் பாதுகாப்பதற்கு பாதுகாப்பு மதில் அமைத்து தருமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அரசாங்கத்திற்கும் பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த ஆலயமானது பொது மக்களின் உழைப்பினால் உருவானது. ஆனால் அண்மைக்காலமாக ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது இந்த ஆலயத்துக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு இந்த பாலமும் உடைந்து போகும் நிலையில் காணப்பட்டது ஆகவே நாங்கள் இது குறித்து இராஜங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்த இரண்டையும் பாதுக்காக்கும் வகையில் பல இலட்சம் ரூபா செலவில் மதில் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவருக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றோம் என மக்கள் தெரிவித்தனர்.
ஹற்றன் விசேட நிருபர்
from tkn