உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்கள்

மீளாய்வுக் குழுவினால் பரிந்துரை  

உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது.  

அத்துடன், அக் குழுவினால் உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுவதற்கான மேலும் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.  

பாராளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு அவ் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 12 பரிந்துரைகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

எந்தவொரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழுவோ உள்ளூராட்சி அமைப்பில் பிரதிநிதித்துவத்தைப் பெற, அந்த குழு 25 வீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

Sat, 09/04/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை