நாட்டிற்குள் புதிய திரிபுகள் நுழைவதை கட்டுப்படுத்தலாம்

Dr.ஹேமந்தவின் கருத்தை Dr.ரவி ரன்னன் எலிய மறுதலிப்பு

கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லையென்று பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாதென வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.

அதிதீவிர எல்லைக்கட்டுப்பாடுகள் மற்றும் அதிக எண்ணிக்கையான பரிசோதனைகளின் ஊடாக புதிய திரிபுகள் உள்நுழைவதையும் அவை வேகமாகப் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியுமென்று சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியநிபுணர் ரவி ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் அடையாளம் காணப்படலாம்.

புதிய வைரஸ் திரிபொன்று ஒரு நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கான பொறிமுறைகள் எந்தவொரு நாட்டிலும் இல்லையென்று பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியநிபுணர் ஹேமந்த ஹேரத் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

அதுகுறித்த செய்தியை மேற்கோள்காட்டி வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய அவரது உத்தியோகபூர்வ தனது டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

Fri, 09/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை