இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 234 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 234 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-234 Vaccination Centers-22 Districts-Sep-13

- 73,710 Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (13) நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 234 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, 73,710 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (13) காலை இலங்கையை வந்தடைந்துள்ளன.

அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தபானத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசி தொகுதி, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு, இன்று (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

நேற்று (12) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (13) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

Mon, 09/13/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை