- கொழும்பில் நாளை முதல் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி (UPDATE)
- இன்று காலை வந்தடைந்தது மேலும் 4 மில்லியன் Sinopharm டோஸ்கள்
இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (05) நாடு முழுவதும் 17 மாவட்டங்களிலும் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 132 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளையதினம் (06) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் அறிவித்துள்ளார்.
#Sinopharm 20yrs +
For residents of Col 1-15
1) Sugathadasa Stadium-walk in
2) Ginthupitiya MOH office -walk in
3) Forbes Road Community Hall - walk in and echanneling
4) Campbell Park -Walk in
5) Shalika Hall -walk in and echanneling
6) Roxy Gardens - walk-in and echanneling— Dinu Guruge (@dinuguruge) September 5, 2021
அத்துடன், இன்று (05) அதிகாலை சீனாவிலிருந்து மேலும் 4 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
The consignment of four million doses vaccine from touched down at BIA earlier this morning.
Ammo Reloading for the #vaccination war against #COVID19SL pic.twitter.com/j3lvUaYquQ— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) September 5, 2021
மொத்த Sinopharm தடுப்பூசி டோஸ்கள் - 22 மில்லியன்
இலவசமாக கிடைத்தவை (3 மில்.)
மார்ச் 31 - 600,000 (0.6 மில்.)
மே 25 - 500,000 (0.5 மில்.)
ஜூலை 27 - 1,600,000 (1.6 மில்.)
ஓகஸ்ட் 28 - 0.3 மில்லியன்
கொள்வனவு செய்யப்பட்டவை (19 மில்.)
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
ஓகஸ்ட் 06 - 2.14 மில்லியன்
ஓகஸ்ட் 08 - 1.86 மில்லியன்
ஓகஸ்ட் 24 - 1 மில்லியன்
ஓகஸ்ட் 28 - 2 மில்லியன்
செப்டெ. 04 - 4 மில்லியன்
நேற்று (04) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)
இன்று (05) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
from tkn